'காசி பளிச்சென்று கூட்டம் இல்லாமல் இருந்தால் அது தன் சக்தியை இழந்து விட்டது என்று பொருள் '
ஒரு பார்பர் ஷாப்புக்கு போனால் அங்கே தலை முடிகள் குவிந்து இருக்கும் .காய்கறி மார்க்கட் டுக்கு போனால் அழுகிய காய்கறிகள் ஒரு ஓரமாகக் குவிந்து இருக்கும் .அதேபோல ,காசியில் அழுக்கு இருக்கிறதென்றால் ,அவைகள் தங்களைச் சுத்தப்படுத்திக்கொண்ட மனிதர்கள் கழுவிவிட்ட தாகத்தான் இருக்கும் .நதி மட்டும் அழுக்கில்லை .ஊருக்குள்லேயும் அழுக்கு இருக்கக்காரணம் நம்பிக்கையோடு வந்து குவியும் ஜனக் KUTTAM
'நாம் காசிக்கு வந்து விட்டோம் .இனிநமக்கு பாவமில்லை தோஷ மில்லை 'என்று அடி மனதில் இருந்து ஒவ்வொருவரும் எண்ணுவதால் அவர்கள் விடும் முச்சில்குட அங்கே பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்கிறது .அந்தக்கா ற்றுதான் அங்கே சுற்றி சுற்றி வருகிறது .மனித சமுதாயம் தான் மனதையும் ,உடம்பையும் ஒரு சேர சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்!என்பதற்காகவே இப்படி ஓர் ஏற்பாட்டை நமது சான்றோர்கள் செய்து வைத்துள்ளார்கள்.
என் யாத்திரை அனுபவங்கள்
இந்திரா சௌந்தரராஜன்
No comments:
Post a Comment