Friday, March 9, 2012

ஒன்றைப்  புரிந்துகொள்ளுங்கள்.  மாமியார்  என்றுமே மருமகளுக்கு  அம்மா 

ஆக  முடியாது.  அதேபோல்  ,மருமகளும்  மகள்  ஆக  முடியாது.  அம்மா- மகள்

உறவு  அன்பானது. மாமியார்-  மருமகள்  நட்பாக  மட்டுமே   இ  ருக்க முடியும். 

அம்மா-மகளுக்கு  இடையே எந்த  எல்லைக் கோடுகளும்  கிடையாது.!ஆனால்

மாமியாருக்கும்  மருமகளுக்கும்  நடுவே  எல்லைக்  கோடுகள் உள்ளன.  நட்பு 

நீடிக்க ,மனம்  திறந்து  பேசிப்பாருங்கள்  .  

                                                                                     விசாலாட்சி பாலகிருஷ்ணன்

                                                                                                      சென்னை  24
அவள் விகடன்
 ஏப்ரல் 8 --2005 

Thursday, March 8, 2012

நான்  சிறுவனாக  இருந்தபோது  இந்த  உலகை

மாற்ற ஆசைப்பட்டேன்  . நடக்கவில்லை 

இளைஞன்  ஆனபோது ஊரைத்திருத்த   முனைந்தேன்

முடியவில்லை 

குடும்பத்  தலைவன் ஆனபோது  குடும்பத்தையாவது 

திருத்த  விழைந்தேன்  .இயலவில்லை  .

தந்தை ஆனபோது  பிள்ளைகளை  மாற்றி விடவேண்டும்  என்று துடித்தேன்

அவர்கள் என் பேச்சை கேட்கவில்லை 

மரணப்படுக்கையில்தான்  எனக்குப் புரிந்தது 

இவ்வளவு  முயற்சிகள் செய்ததிற்கு  பதிலாக 

நான் கொஞ்சம் மாறியிருக்கலாம் என்று

ஆனால் நேரம்  கடந்து விட்டது !                                                                                   

                                                                                    நீயும் நானும் 

                                                                  கோபிநாத்    [ஆனந்த விகடன்  ]  8 -9 -2010